யாழ், மன்னார் ஆயர்களை உடன் கைது செய்யுங்கள்; இராவணா பலய கோரிக்கை
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆயர்களை உடனடியாக கைது செய்யு மாறு இராவணா பலய அமைப்பு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில், இராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தகந்தே சத்தாதிஸ்த தேரர் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத் தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜேராப்பிடம் ஆயர்கள் இருவரும் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கை அரசாங்கத்தினால் போர்க் குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோர் வழங்கிய பொய்யான தகவல்களின் அடிப்படை யிலேயே, இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை மேற் கொள்ள வேண்டும் என்று ஸ்டீபன் ராப் கருத்து வெளியிட்டார்.
ஸ்டீபன் ராப்பின் கருத்திற்கு கண்டனம் தெரிவிப்பதோடு, ஆயர் கள் இருவரையும் கைது செய்ய பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.