13 ஆவது திருத்தம் செத்துப் போய்விட்டது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கின்ற நிலையில் 13 ஆவது திருத்தத்தை தீர்வாக கருத முடியாதென்று தமிழ் தேசிய மக்கள் முண்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தேவையான அடுத்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்து முடிவு செய்வதற்கு, சிறிலங்காவை அமெரிக்கா கவனமாக அவதானித்து வருவதாக, போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்கத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர எடுக்கப்பட்டுள்ள முயற்சி தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்விடம் இன்றைய தினம் எழுத்து மூலம் தமது எதிர்ப்பை சமர்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பலவருடங்களாக சிறைச்சாலைகளில் எவ்விதமான விசாரணைகளுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் சார்பாக அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்திலுள்ள முக்கிய அதிகாரங்களை நீக்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழ்நிலையில் அவசரமானதும், முக்கியமானதுமான பேச்சுகளை நடத்துவதற்கு உடனடியாகப் புதுடில்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்திய மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியவரை நம்பிய பல நூறு பேர் ஏமாற்றமடைந்துள்ளனர். வேலை கிடைக்கும், வெளிநாட்டிற்குச் செல்லலாம், விசா கிடைக்கும் என்ற ஆவலோடு வந்த வட இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வவுனியா நகர வீதிகளில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றனர்.
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமக்கந்தன் ஆலயத்தில் தமிழர்களின் கலாசார பாரம்பரிய நடைமுறைகள் யாவும் மாற்றப்பட்டுள்ள நிலையில் இன்று ஆடிப் பௌர்ணமி உற்சவம் ஆவணிப் பௌர்ணமியாக மாற்றப்பட்டுள்ளமை தமிழர்களின் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளையும் வழிபாட்டு முறைகளையும் இல்லாமல் செய்வதற்கான செயற்பாடாகவே உள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு ஜெயலலிதாவால் மட்டுமே தனி ஈழத்தை பரிசளிக்க முடியும் என்று அதிமுக தலைமை கழக பேச்சாளரும், சினிமா இயக்குனருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பொட்டு அம்மான் உயிரோடு தன் உறவினர்களுடன் நலமாக உள்ளார். இதோ அவரது இப்போதைய புகைப்படம் என சில இலங்கைத் தமிழர் தளங்கள் இரு படங்களை வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியா வழியாக ஆஸ்திரேலியாவிற்குள் திருட்டுத்தனமாக குடியேற 70 பேர்கள் படகு மூலம் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற படகு கடந்த வெள்ளியன்று கிறுஸ்துமஸ் தீவிலிருந்து 65-வது கடல் மைலில் விபத்துக்குள்ளானது.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 ... 206 207 208 அடுத்தபக்கம் >> |